1992ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொடர்பியல் துறையானது ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை தொடர்பியல் துறையானது பல்வேறு பத்திரிகையாளர்கள், புகைப்பட செய்தியாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் என தமிழ் ஊடகங்களுக்கு தொடர்ந்து திறமைமிகுந்த ஆட்களை உருவாக்கித் தந்துகொண்டே இருக்கிறது. இந்தத்துறை மாணவர்களுக்கு தமிழகத்திலுள்ள ஊடகத்துறை மாணவர்களோடு ஒரு அறிமுகம் ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் 2004ம் ஆண்டு 'மனோ மீடியா கிளப்' என்ற மாணவர் அமைப்பு , நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சரத் குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு, 'மனோ மீடியா பியஸ்டா' என்ற நிகழ்ச்சி இந்த அமைப்பின் மூலம் வெற்றிகரமாக நடந்தது. அதற்கு அடுத்த வருடம் திருநெல்வேலியின் அடையாளமான கரிசல் மண்ணை கௌரவிக்கும் வகையில் 'கரிசல் திரைவிழா' என்ற பெயர் மாற்றம் பெற்றது. அன்று முதல் இன்றுவரை 'கரிசல் திரைவிழா' ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியானது திருநெல்வேலி விளம்பரதாரகள் வழங்கும் நிதியுடனும் இந்தத்துறை மாணவர்களின் பெரும் பங்களிப்புடனும் துறை ஆசிரியர்களின் வழிக்காட்டுதலுடனும் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. கரிசல் திரை விழாவிற்கு சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, புகைப்படம், இலக்கியம் ஆகிய துறைகளின் நிபுணர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் போட்டி நடுவர்களாகவும் கலந்துகொண்டு தத்தமது துறையின் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். திரைப்பட இயக்குனர்கள் பாண்டியராஜன், 'கற்றது தமிழ்' ராம், மகிழ்ச்சி பட இயக்குனர் கௌதமன், 'பாலை' பட இயக்குனர் செந்தமிழன், 'மதுபானக்கடை' இயக்குனர் கமலக்கண்ணன், 'ரேணிகுண்டா' படத்தின் நடிகர் ஜானி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' குழுவினர், 'நீயா நானா' புகழ் கோபிநாத், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பத்திரிகையாசிரியர் மற்றும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் , இயக்குனர் சீனு ராமசாமி , எவிடென்ஸ் கதிர் , தமிழ் ஸ்டூடியோ அருண் , பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் இதுவரை நடந்த கரிசல் திரைவிழாக்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். கரிசல் திரைவிழவானது மாணவர்களுக்கு ஊடக நிபுணர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதன மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஊடங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றது. ஆக தொடர்பியல் துறை மாணவர்கள், கரிசல் திரைவிழாவின் மூலம் தங்களது இருப்பை அழுத்தமாக நிரூபித்து வருகின்றனர்.
Manonmaniam Sundaranar University commenced the department of communication in the year 1992. Till now, the department has discovered many young talents in the field of mass communication and journalism. In 2004, it formed “Mano Media Club” headed by the department students and it was started by Actor SarathKumar. It serves importantly as a platform that connects media experts and young talents together. In 2005, Mani Media Club organized an event called “Mano Media Fiesta”, which showed a great success. In order to denote the identity of Tirunelveli’s heritage soil, the event was renamed as “Karisal Thirai Vizha”. This event is conducted in a very grand way for about 10 years with the contribution of sponsors, students and most importantly with the guidance of the staffs in the department. Professionals of print and broadscasting media would be attending as the chief guest and address the students. The chief guests who took part to brighten up this event are actor Pandiyarajan, KatrathuTamil Ram, Director Gowthaman, Director KamalaKannan ( Madubanakadai movie), Director Senthamizhan(Palai movie) Actor Johnny (Renigunda), Team members of “Naduvula Konjam Pakkatha Kanom” movie, “Neeya Naana” Talk show anchor Gopinath, Writer S.Ramakrishnan, Editor Manushyaputhran, Director Cheenu Ramasamy, Evidence Kathir, Tamil Studio Arun, and Journalist K.N.Sivaraman. We are filled with immense pleasure to provide an opportunity for the students to expose their talents and give them a fruitful experience on the whole.
03-02-2016
03-02-2016
04-02-2016
04-02-2016
05-02-2016
09:00 AM - 11:00 AM
01:30 PM - 03:30 PM
03:30 PM - 04:30 PM
12:00 PM - 01:00 PM
03:30 PM - 04:30 PM
11:00 AM - 12:00 PM
11:00 AM - 12:00 PM
03:30 PM - 04:30 PM
12:00 PM - 01:00 PM
10:00 AM - 11:00 AM
06:00 PM - 07:00 PM
06:00 PM - 07:00 PM
05:00 PM - 06:00 PM
09:00 AM - 10:00 AM
11:00 AM - 12:30 AM
07:00 PM - 08:00 PM